முன்னாள் ராணுவ வீரரின் மகன் தேசிய கொடியுடன் உண்ணாவிரதம்

கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு முன்னாள் ராணுவ வீரரின் மகன் தேசிய கொடியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2022-05-30 20:53 GMT

கடலூர், 

கிள்ளை ரெயிலடி கீழ்அனுவம்பட்டை சேர்ந்தவர் முருகேசன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் சர்மா. இவர் கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில் இரவு நேர காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னை பணி நிரந்தரம் செய்ய வேண்டி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பி இருந்தார். கடலூர் கலெக்டரிடமும் மனு அளித்து உள்ளார். இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று தேசிய கொடியுடன் கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். இதை பார்த்த போலீசார், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், தன்னை பணி நிரந்தரம் செய்யக்கோரி பலமுறை மனு அளித்து விட்டேன். ஆனால் பலனில்லை என்றார். தொடர்ந்து அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை அனுப்பி வைத்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்