பாப்பாரப்பட்டி அருகேமூதாட்டியிடம் 10 பவுன் நகை திருட்டு

பாப்பாரப்பட்டி அருகே மூதாட்டியிடம் 10 பவுன் நகை திருட்டு போனது.

Update: 2023-10-14 19:00 GMT

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னகண்ணு (வயது 70). இவருடைய கணவர் இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். அனைவரும் திருமணம் முடிந்து அவரவர் வீட்டில் வசிக்கின்றனர். இந்த நிலையில் சின்னகண்ணு ஆலமரத்துப்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 9-ந் தேதி சின்னகண்ணு ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க நின்றார். அப்போது அங்கு நின்ற வாலிபர் ஒருவர் சின்னகண்ணுவிடம் நீங்கள் தனது தாயார் போல் இருப்பதாகவும், தனக்கு பசி எடுப்பதாகவும் வீட்டில் சாப்பாடு இருந்தால் போடுமாறும் கூறினாராம்.

வாலிபர் மீது கருணை காட்டிய சின்னக்கண்ணு தனது மகள் வீட்டில் உட்கார வைத்து வாலிபருக்கு சாப்பாடு போட்டுள்ளார். சாப்பிட்டு விட்டு மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பிய வாலிபர் மூதாட்டியின் செயின், மோதிரம், தங்க காசுகள் உள்ளிட்ட 10 பவுன் நகைகளை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்