அரசு பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள் திருட்டு

அரசு பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள் திருட்டு போனது.

Update: 2023-01-10 18:45 GMT

திருப்புல்லாணி, -

திருப்புல்லாணி அருகே உள்ள பெரியபட்டினம் அரசு மேல் நிலைப்பள்ளியில் விடுமுறை நாட்களில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அட்டகாசம் செய்து வந்தனர். இதையடுத்து பள்ளி வளாகத்தில் 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் பள்ளிக்குள் புகுந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த 7 கேமராக்களை திருடியதோடு ஒரு கேமராவை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் தபசுமுத்து திருப்புல்லாணி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்