வீட்டில் இருந்த நகை-பணம் திருட்டு

வேப்பந்தட்டை அருகே வீட்டில் இருந்த நகை-பணம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-01-04 18:49 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா (வயது 50). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் 3 பேரும் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு மற்றும் பீரோ திறக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.700 ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சரோஜா அளித்த புகாரின் பேரில் கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்