திருக்குறள் பேரவை கூட்டம்
மயிலாடுதுறையில் திருக்குறள் பேரவை கூட்டம் நடந்தது;
மயிலாடுதுறை, மே.31-
மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் திருக்குறள் பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பேரவை தலைவர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார். பேரவை செயலாளர் செல்வகுமார் வரவேற்று பேசினார். சென்னை அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் நிகழ்ச்சி இயக்குநர் சுந்தர ஆவுடையப்பன் கலந்து கொண்டு 'உள்ளம் உடைமை " என்ற தலைப்பில் பேசினார். முடிவில் பேரவை பொருளாளர் சு.ராமச்சந்திரன் நன்றி கூறினார்.