சாலைக்கிராமத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்
பராமரிப்பு பணியால் சாலைக்கிராமத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.;
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே சாலைக்கிராமம், கோட்டையூர், வண்டல், அளவிடங்கான், பூலாங்குடி, சீவலாதி, பஞ்சனூர், சூராணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்செயற்பொறியாளர் மனோகரன் ெதரிவித்து உள்ளார்.