சத்தியவாகீஸ்வரர் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது.;

Update:2023-05-27 01:20 IST

களக்காடு:

களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி-அம்பாள் விஷேச அலங்காரத்தில் கொடிமர மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டு, விசேஷ அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நடராஜர் பச்சை சாத்தி எழுந்தருளும் நிகழ்ச்சி 8-ம் நாளான வருகிற 31-ந் தேதி (புதன் கிழமை) நடக்கிறது. அன்று பகல் 10 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மதியம் 2 மணிக்கு நடராஜர் பச்சை பட்டு உடுத்தி, பச்சை சாத்தி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அதன்பின் கங்காளநாதர், சந்திரசேகர் சுவாமிகளும், சத்தியவாகீஸ்வரர் பூங்கோவில் வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் வீதி உலா வருகின்றனர். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் நாளான வருகிற 1-ந் தேதி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள், விழா மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்