கற்பக விநாயகர் கோவில் வருசாபிஷேகம்

பாளையங்கோட்டை கற்பக விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.

Update: 2023-06-25 20:05 GMT

பாளையங்கோட்டை சீனிவாசநகரில் உள்ள கற்பகவிநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு விநாயகருக்கு மாகாப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு யாகசாலை பூஜையும், பூர்ணாகுதி தீபாராதனையும் நடந்தது. காலை 10-15 மணிக்கு விமானத்திற்கும், கற்பக விநாயகருக்கும் புனித நீர் ஊற்றி வருசாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து மகாஅபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இரவில் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்