போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 207 பேர் மீது வழக்குப்பதிவு;ரூ.56 ஆயிரம் அபராதம் வசூல்

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 207 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ரூ.56 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Update: 2023-03-04 21:36 GMT

ஈரோடு மாநகரில் தெற்கு போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் கடந்த மாதம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 133 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல் மதுபோதையில் வாகனம் இயக்கிய 8 பேர் மீதும், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டிய 4 பேர் மீதும் என பல்வேறு பிரிவுகளின் கீழ் 207 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.56 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் மதுபோதையிலும், செல்போன் பேசியபடியும் வாகனம் ஓட்டிச்சென்ற 4 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு, தெற்கு போக்குவரத்து போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்