கடலூரில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கடலூரில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-08-25 16:10 GMT

கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகரை சேர்ந்தவர் நவீன். இவரது மனைவி பவித்ரா (வயது 28). இவர்களுக்கு 2½ வயதில் விகாஷ் என்ற மகன் உள்ளான். கடந்த சில நாட்களாக பவித்ரா, கடன் பிரச்சினையால் மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பவித்ரா, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த தேவனாம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தற்கொலை செய்து கொண்ட பவித்ராவின் உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்ரா கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்