பரமத்திவேலூர் அருகே வாகனம் மோதி பெண் பலி

பரமத்திவேலூர் அருகே வாகனம் மோதி பெண் பலி;

Update:2022-06-21 00:15 IST

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே உள்ள ஓலப்பாளையம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு மோகனூரில் இருந்து பரமத்திவேலூர் செல்லும் சாலையில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மாரியம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை‌ அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தில் சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்