மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி பெண் சாவுகணவர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி பெண் உயிரிழந்தாா்.

Update: 2023-08-21 18:45 GMT


விக்கிரவாண்டி, 

புதுச்சேரி மாநிலம் கலிதீர்த்தாள் குப்பத்தை சேர்ந்தவர் நீலமேகம் மகன் முருகையன் (வயது 55). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது மனைவி கிருஷ்ணவேணியுடன்(52) திண்டிவனத்தில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

இரவு 11 மணியளவில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே உள்ள வராக நதி பாலத்தை கடக்க முயன்ற போது, அவர்களுக்கு பின்னால் திருச்சி நோக்கி வேகமாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கிருஷ்ணவேணி உடல் நசுங்கி சம்ப இடத்திலேயே இறந்தார். காயமடைந்த முருகையன், சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சைஅளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்