பாம்பு கடித்து பெண் சாவு

பாம்பு கடித்து பெண் சாவு

Update: 2022-06-11 20:26 GMT

ஒரத்தநாடு:

திருவோணத்தை அடுத்துள்ள நெய்வேலி நரிபத்தை கிராமத்தை சேர்ந்தவர் பாப்பையா. இவரது மனைவி பிரியா (வயது47). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா இறந்தார். இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்