மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

கலசபாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-01-18 21:25 IST

கலசபாக்கம்

கலசபாக்கத்தை அடுத்த கேட்டவரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சாந்தி (வயது 58). இவர் இன்று ஆதமங்கலம் புதூர் செல்லும் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அ

ப்போது பின்புறமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த கடலாடி போலீசார் சென்று சாந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்