ரெயில் மோதி பெண் பலி

ரெயில் மோதி பெண் உயிரிழந்தார்.

Update: 2022-06-11 21:05 GMT

மணப்பாறை:

மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டி ராயப்பன் தெருவை சேர்ந்தவர் சாந்தாமேரி(வயது 55). இவர் வீட்டு வேலை செய்து வந்தார். நேற்று பூமாலைபட்டி அருகே வேலைக்கு செல்வதற்காக ரெயில்வே தண்டவாளத்தை அவர் கடந்த செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்