பெண் மாயம்

பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2023-08-06 00:00 IST

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஜூப்பிலி ரோட்டு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் சங்கீதா (வயது 24). வீட்டில் இருந்த சங்கீதாவை திடீரென காணவில்லை. இதனால் அவரை உறவினர்கள், தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து விஜயகுமார் அளித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கீதாவை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்