கயத்தாறில் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

கயத்தாறு காந்தாரி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.;

Update:2023-04-27 00:15 IST

கயத்தாறு:

கயத்தாறில் காந்தாரி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 8 நாட்களுக்கு முன்பு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. எட்டாம் திருவிழா அன்று மதியம் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் முளைப்பாரியுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு சென்று, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பால் குடம் ஊர்வலம், அக்கினி சட்டி எடுத்தல் மற்றும் நேத்திகடனாக சாமி உருவ பொம்மையை ஏராளமான சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எடுத்து ஊர்வலமாக வந்தனர். அம்பாளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்