தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

மணவாளக்குறிச்சியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Update: 2022-11-24 18:45 GMT

மணவாளக்குறிச்சி, 

மணவாளக்குறிச்சி காந்தாரிவிளையை சேர்ந்தவர் மாகீன் (வயது 60), கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்தநிலையில் மாகீன் சம்பவத்தன்று விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்