இண்டூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து கட்டிட தொழிலாளி சாவு

Update:2023-06-11 01:00 IST

பாப்பாரப்பட்டி

இண்டூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கட்டிட தொழிலாளி

இண்டூர் அருகே உள்ள கூலிக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் ரகு (வயது 22). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று தனது விவசாய கிணற்றில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். பின்னர் அவர் மின் மோட்டாரை நிறுத்துவதற்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் ரகு வீடு திருப்பவில்லை.

இதனால் குடும்பத்தினர் கிணற்றுக்கு வந்து பார்த்தனர். அப்போது கிணற்று அருகில் ரகுவின் மோட்டார் சைக்கிள் மட்டும் நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் ரகுவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து இண்டூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தர்மபுரி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கிணற்றில் ரகுவை தேடினர்.

விசாரணை

அப்போது அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடலை தீயணைப்பு படையினர் மீட்டு மேலே கொண்டு வந்தனர். தொடர்ந்து அங்கு வந்த போலீசார் ரகுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்