நெகமம்
நெகமம் அருகே உள்ள தேவணாம்பாளையத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம்(வயது 45). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கப்பளாங்கரையில் இருந்து தேவணாம்பாளையம் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவசுப்பிரமணியம் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே சிவசுப்பிரமணியம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.