ராஜபாளையம்,
ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் உலக புத்தக தின விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் ஜெயசீலன் கலந்துகொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். இதில் கல்லூரி செயலர் சிங்கராஜ், முதல்வர் வெங்கடேஸ்வரன், வட்டாட்சியர் ராமச்சந்திரன், கல்லூரி பேராசிரியர்கள், ராஜுக்கள் கல்லூரி மாணவ, மாணவிகள், முறம்பு ஆதி திராவிடர் நல விடுதி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.