மூதாட்டி கொலை வழக்கில் வாலிபர் கைது

மூதாட்டி கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-08-31 01:51 IST

மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் மந்தியார் ஓடையைச் சேர்ந்த சந்திரா (வயது 62) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டிக்கருப்பு கோவில் அருகே காட்டுப்பகுதியில் இறந்து கிடந்தார். போலீசாரின் விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சந்தேகத்தின்பேரில் பூனாம்பாளையம் ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் சுந்தர் (24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் கொலை செய்தது தெரியவந்தது. சுந்தர் மது அருந்தியதை பார்த்த சந்திரா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தர் சந்திராவை கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்