ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாத தளபதி உள்பட 8 பேர் சுட்டுக்கொலை: ராணுவம் அதிரடி

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாத தளபதி உள்பட 8 பேர் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Update: 2020-07-26 23:20 GMT
காபூல், 

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தற்போது உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்தும் அப்பாவி மக்களை குறிவைத்தும் தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதேசமயம் நாடு முழுவதும் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் தரை வழியாகவும் வான் வழியாகவும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள கோர் மாகாணம் ஷாராக் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இதில் தலிபான் பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தளபதி ஒருவர் உட்பட 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்