மெக்சிகோவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2 ஆக பதிவு
மெக்சிகோ நாட்டில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
நியூயார்க்,
மெக்சிகோ நாட்டின் பவிஸ்பே நகருக்கு மேற்கு-தென்மேற்கில் இருந்து 26 கி.மீ. தொலைவில் நேற்றிரவு 9.19 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இது ரிக்டரில் 5.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
எனினும், நிலநடுக்கம் தொடர்ச்சியாக ஏற்பட்ட பொருள் இழப்பு உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.