மர்ம நோய் தாக்கி கொத்துக்கொத்தாக சாவு: கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் இந்திய-அமெரிக்க டாக்டர் தகவல்

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஒருவித மர்ம நோய் தாக்கி கால்நடைகள் கொத்துக்கொத்தாக மடிந்து வருகின்றன;

Update:2022-08-08 03:43 IST

வாஷிங்டன், ஆ

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஒருவித மர்ம நோய் தாக்கி கால்நடைகள் கொத்துக்கொத்தாக மடிந்து வருகின்றன. ராஜஸ்தான், குஜராத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகளும், பஞ்சாப்பில் 400-க்கு மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.

இது அந்தந்த மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் மேற்படி மர்ம நோயை கட்டுப்படுத்த மிகப்பெரிய அளவிலான தடுப்பூசி பணிகள் தேவை எனவும், கால்நடைகளை மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்களின் அமெரிக்க சங்கத்தின் தலைவர் ரவி முரார்கா தெரிவித்து உள்ளார்.

வட அமெரிக்காவின் ராஜஸ்தான் சங்கத்தின் கால்நடை பராமரிப்புத்துறை தலைவராகவும் இயங்கி வரும் இவர், ராஜஸ்தானில் நிலைமை மோசமாக இருப்பதாக கூறியுள்ளார். இந்த நோயை சமாளிப்பது மற்றும் அதற்கான தடுப்பூசிகளை இந்தியாவுக்கு விரைவாக அனுப்புவது குறித்து நிபுணர்களுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் முரார்கா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்