புரட்டாசி கடைசி வெள்ளிக்கிழமை: காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் குவிந்த பக்தர்கள்.

புரட்டாசி கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் திரளாக தரிசனம் செய்தனர்.;

Update:2022-10-14 15:38 IST

நெல்லை:

புரட்டாசி மாத கடைசி வெள்ளி என்பதால் இன்று காலை முதலே காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் இருசக்கர வாகனம் மற்றும் கார்கள், அரசு பேருந்துகளில் வர துவங்கினர் கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து பாபநாசம் பணிமனையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

கோவிலில் மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பேச்சியம்மன், பட்டவராயன், தூசி மாடன், தளவாய் மாடன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் கோவில் முன்பு ஓடும் தாமிரபரணி ஆற்றில் நீராடி வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சொரிமுத்தையனார் கோவியிலை சுற்றி மண்டபம் அமைப்பது மற்றும் கோவில் திருப்பணிக்காக 12 கோடி ரூபாய் ஒதுக்கியதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார். ஆனால் இதுவரை அதற்கான பணிகள் எதுவுமே தொடங்கவில்லை. மேலும் ஆடி அமாவாசை முடிந்த பின்பு கோவில் நிலைமை பரிதாபமாக உள்ளது. பக்தர்கள் செல்லும் பாதையில் தலைக்கு மேலே ஆபத்தான நிலையில் ஆஸ்பெட்டாஸ்சீட்டுகள் உடைந்த நிலையில் உள்ளது.

சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இதனை கண்டு, அறநிலையத்துறை அமைச்சர் திருப்பணிக்கு ஒதுக்கியதாக கூறி நீண்ட நாட்கள் ஆகியும் வேலை நடைபெறவில்லை. பக்தர்கள் தலையில் விழுந்து ஏதாவது விபரீதம் நடைபெறும் முன் இந்த புனரமைப்பு பணியை தொடர வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்