வேளுக்குடி ருத்ர கோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

வேளுக்குடி ருத்ர கோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு;

Update:2022-06-12 21:50 IST

கூத்தாநல்லூர்:

வேளுக்குடி ருத்ர கோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் ருத்ர கோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் சிவபெருமான், நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நீடாமங்கலம்

இதேபோல் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில், பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.

திருமக்கோட்டை

திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்திகேஸ்வருக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திரவிய பொடி, தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மன்னார்குடி

மன்னார்குடியில் உள்ள அண்ணாமலை நாதர் கோவில், காமாட்சியம்மன் கோவில், நீலகண்டேசுவரர் கோவில், கைலாசநாதர் கோவில், மீனாட்சியம்மன் கோவில், காசிவிஸ்வநாதர் கோவில், ஜெயங்கொண்ட நாதர் கோவில், பாமணி நாகநாதர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிவன் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்