நீடாமங்கலம் முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு
நீடாமங்கலம் முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு;
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சுப்பிரமணியர், பாலதண்டாயுதபானி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.