ஒருநாள் கிரிக்கெட்: மயங்க் அகர்வால் சதத்தால் இந்திய ‘பி’ அணி வெற்றி

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மயங்க் அகர்வால் சதத்தால் இந்திய ‘பி’ அணி வெற்றிபெற்றது.

Update: 2018-08-25 22:15 GMT
பெங்களூரு,

இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, தென் ஆப்பிரிக்கா ‘ஏ’, ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்தியா ‘ஏ’-இந்தியா ‘பி’ அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய ‘ஏ’ அணி 49 ஓவர்களில் 217 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

அம்பத்தி ராயுடு 48 ரன்னும், கவுதம் 35 ரன்னும், சஞ்சு சாம்சன் 32 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 20 ரன்னும் எடுத்தனர். இந்தியா ‘பி’ அணி தரப்பில் கிருஷ்ணா 4 விக்கெட்டும், ஸ்ரீரேயாஸ் கோபால் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் ஆடிய இந்திய ‘பி’ அணி 41.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மயங்க் அகர்வால் 124 ரன்கள் குவித்தார்.

மேலும் செய்திகள்