டிஎன்பிஎல் கிரிக்கெட் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு 128 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர்: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு 128 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி.

Update: 2019-08-09 12:02 GMT
திருநெல்வேலி,

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் இன்றைய லீக் ஆட்டம் திருநெல்வேலியில் மதியம் 3 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு 128 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி.

மேலும் செய்திகள்