பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி

7-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

Update: 2020-02-18 22:30 GMT
பிரிஸ்பேன்,

பிரிஸ்பேனில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி, வெஸ்ட்இண்டீசை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிகா பாண்டே 24 ரன் எடுத்தார். பின்னர் 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 105 ரன்களே எடுத்தது. இதனால் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் வெஸ்ட்இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை பூனம் யாதவ் வீசினார். அவர் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

அடிலெய்டில் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை எளிதில் தோற்கடித்தது. இன்னொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

மேலும் செய்திகள்