வங்காளதேச அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார், மோர்தசா

வங்காளதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியின் கேப்டன் மஷ்ரப் மோர்தசா, அந்த பொறுப்பில் இருந்து விடுபட முடிவு செய்துள்ளார்.

Update: 2020-03-05 23:57 GMT
சைல்ஹெட்,

‘ஜிம்பாப்வேக்கு எதிராக இன்று நடக்கும் 3-வது ஒரு நாள் போட்டியே நான் கேப்டனாக களம் காணும் கடைசி ஆட்டமாகும். அதன் பிறகு ஒரு வீரராக அணியில் நீடிக்க முயற்சிப்பேன்’ என்று 36 வயதான மோர்தசா கூறியுள்ளார். வேகப்பந்து வீச்சாளரான மோர்தசாவின் தலைமையில் வங்காளதேச அணி 87 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 49-ல் வெற்றி கண்டிருக்கிறது.

மேலும் செய்திகள்