சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் : நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா மோதல்

சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட்டில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு -கர்நாடகா மோதுகின்றன.

Update: 2021-11-21 12:19 GMT
டெல்லி

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான அரையிறுதி ஆட்டத்தில்  தமிழ்நாடு - ஹைதராபாத் அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் தமிழக அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .இந்த வெற்றியால் தமிழ்நாடு அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது 

மற்றொரு  அரையிறுதி போட்டியில் கர்நாடகா -விதர்பா அணிகள் மோதின. .இந்த ஆட்டத்தில் கர்நாடகா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.இதனால் கர்நாடகா அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதும்  இறுதிப்போட்டி நாளை  டெல்லியில் நடைபெறும்.

இதற்கு முன்பு 2019 -ம் ஆண்டு நடந்த இறுதி போட்டியில் தமிழக அணியை 1 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடகா வெற்றி பெற்று கோப்பையை கைப்பிற்றியது .

இதனால் இந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லும் முனைப்பில்   தமிழ்நாடு அணி உள்ளது.

மேலும் செய்திகள்