ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; ஒடிசா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நார்த் ஈஸ்ட் யுனைடெட்

12 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-13 16:08 GMT

Image Courtesy: @IndSuperLeague

கவுகாத்தி,

12 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி தடகள மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிசா எப்.சி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி முதல் பாதியிலேயே 3 கோல்களை அடித்து அசத்தியது. இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.

இறுதியில் இந்த ஆட்டத்தை 3-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி கைப்பற்றியது. இந்த தொடரில் நாளை கோவாவில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி - கோவா எப்.சி அணிகள் மோத உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்