மாநில நீச்சல் போட்டி சென்னையில் நடக்கிறது

மாநில நீச்சல் போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளது.

Update: 2018-05-29 22:15 GMT
சென்னை,

தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில் 35-வது சப்-ஜூனியர் மற்றும் 45-வது ஜூனியர் மாநில நீச்சல் போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் வளாகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. 4 வயது பிரிவுகளில் நீச்சல் போட்டிகளும், 3 வயது பிரிவுகளில் டைவிங் போட்டிகளும் நடத்தப்படுகிறது. இதில் 650 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். போட்டியை தமிழக போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீதர் தொடங்கி வைக்கிறார்.

பரிசளிப்பு விழாவில் சர்வதேச முன்னாள் தடகள வீராங்கனை ஷைனி வில்சன் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.

இந்த போட்டியில் இருந்து ஜூன் 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெறும் தேசிய சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் நீச்சல் போட்டிக்கான தமிழக அணி தேர்வு செய்யப்படும்.

இந்த தகவலை தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க செயலாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்