உலக ஜூனியர் மல்யுத்தத்தில் இந்திய வீரர் தீபக் சாம்பியன்
உலக ஜூனியர் மல்யுத்தத்தில் இந்திய வீரர் தீபக் சாம்பியன் பட்டம் வென்றார்.
புதுடெல்லி,
எஸ்தோனியாவில் நடந்த உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் (86 கிலோ உடல் எடைப்பிரிவு) இந்திய வீரர் தீபக் பூனியா, ரஷியாவின் அலிக் ஷிப்ஜூகோவை எதிர்கொண்டார். இருவரும் தலா 2 புள்ளிகளுடன் சமநிலை வகித்த நிலையில் கடைசி புள்ளியை எடுத்ததன் அடிப்படையில் தீபக் பூனியா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். உலக ஜூனியர் மல்யுத்தத்தில் இந்தியர் ஒருவர் பட்டம் வெல்வது கடந்த 18 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
எஸ்தோனியாவில் நடந்த உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் (86 கிலோ உடல் எடைப்பிரிவு) இந்திய வீரர் தீபக் பூனியா, ரஷியாவின் அலிக் ஷிப்ஜூகோவை எதிர்கொண்டார். இருவரும் தலா 2 புள்ளிகளுடன் சமநிலை வகித்த நிலையில் கடைசி புள்ளியை எடுத்ததன் அடிப்படையில் தீபக் பூனியா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். உலக ஜூனியர் மல்யுத்தத்தில் இந்தியர் ஒருவர் பட்டம் வெல்வது கடந்த 18 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.