பார்வையற்றோருக்கான செஸ் போட்டி: விருதுநகர் வீரர் முதலிடம்

பார்வையற்றோருக்கான செஸ் போட்டியில், விருதுநகர் வீரர் முதலிடம் பிடித்தார்.

Update: 2019-12-24 23:22 GMT
சென்னை,

இந்தியன் வங்கி சார்பில் பார்வையற்றவர்களுக்கான மாநில செஸ் போட்டி சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் அரங்கத்தில் 2 நாட்கள் நடந்தது. 7 ரவுண்ட் கொண்ட இந்த போட்டியில் 52 பேர் கலந்து கொண்டனர். இதில் 6.5 புள்ளிகளுடன் விருதுநகரைச் சேர்ந்த மாரிமுத்து முதலிடத்தை பிடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார். அவருக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை 5 புள்ளியுடன் ஹரிகரன் காந்தியும் (தஞ்சாவூர்), 3-வது இடத்தை 4.5 புள்ளியுடன் செல்வகுமாரும் (திருவண்ணாமலை) பெற்றனர். பரிசுகளை இந்தியன் வங்கி பொது மேலாளர்கள் நாகராஜன், பி.சி.தாஸ் ஆகியோர் வழங்கினர்.

மேலும் செய்திகள்