ஒலிம்பிக்: பளுதூக்கும் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த முதல் திருநங்கை பெண்

நியூசிலாந்தை சேர்ந்த லாரல் ஹப்பர்ட், ஒலிம்பிக்கில் பங்கேற்றா முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

Update: 2021-08-02 21:08 GMT
டோக்கியோ, 

டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று நடந்த பெண்களுக்கான பளுதூக்குதலில் 87 கிலோவுக்கு மேற்பட்டவர்களுக்கான எடைப்பிரிவில் நியூசிலாந்தை சேர்ந்த திருநங்கை லாரல் ஹப்பர்ட் பங்கேற்றார். 

இதன் மூலம் ஒலிம்பிக்கில் கால் பதித்த முதல் திருநங்கை என்ற வரலாறு படைத்த 43 வயதான ஹப்பர்ட் களத்தில் ஜொலிக்கவில்லை. தனக்குரிய வாய்ப்பில் எடையை தூக்க முடியாமல் தடுமாறிய அவர் பதக்க வாய்ப்பை இழந்தார்.

மேலும் செய்திகள்