இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த், துருவ் கபிலா-சீக்கி ரெட்டி அடுத்த சுற்றுக்கு தகுதி!
இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் பிரான்ஸ் நாட்டின் கிறிஸ்டோ போப்போவை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.;
பாலி,
இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், இன்று நடைபெற்ற போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் பிரான்ஸ் நாட்டின் கிறிஸ்டோ போப்போவை 21-18 15-21 21-16 எனும் செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னாள் நம்பர் 1 வீரரும் தற்போது 15ம் நிலை வீரருமான ஸ்ரீகாந்த் அடுத்த சுற்று போட்டியில், உலகின் 6ம் நிலை வீரரான இந்தோனேஷியாவின் ஜொனாதன் கிறிஸ்டியை எதிர்கொள்ள உள்ளார்.
𝗪𝗘𝗟𝗟 𝗗𝗢𝗡𝗘 💪@srikidambi cruised into the last 16 of #IndonesiaMasters2021 after he beat 🇫🇷's Christo Popov 21-18, 15-21, 21-16 in R32 🔥#IndiaontheRise#badmintonpic.twitter.com/zUFr1f5QVB
— BAI Media (@BAI_Media) November 17, 2021
கலப்பு இரட்டையர் போட்டியில் துருவ் கபிலா மற்றும் என் சீக்கி ரெட்டி இணை இந்தோனேஷியாவின் பிரவீன் ஜோர்டான் மற்றும் மெலாட்டி டேவா இணையை 21-11 22-20 எனும் செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
மற்றொரு போட்டியில் காமன்வெல்த் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பாருபள்ளி காஷ்யப், டென்மார்க்கின் ஹான்ஸ் கிறிஸ்டியனிடம் 10-21 19-21 எனும் செட் கனக்கில் தோல்வி அடைந்தார்.
முன்னதாக நேற்று நடைபெற்ற போட்டிகளில், பி.வி.சிந்து மற்றும் லக்ஷயா சென் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.