65 அணிகள் பங்கேற்கும் பெர்ட்ராம் விளையாட்டு போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

முதல்முறையாக பார்வையற்ற மாணவர்களுக்கு கைப்பந்து இடம்பெறுகிறது.;

Update:2023-08-15 01:22 IST

கோப்புப்படம் 

சென்னை,

லயோலா கல்லூரி சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் பெர்ட்ராம் நினைவு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான கல்லூரி, பள்ளிகளுக்கு இடையிலான 89-வது பெர்ட்ராம் நினைவு விளையாட்டு போட்டிகள் இன்று முதல் 31-ந்தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்த கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.

இதில் லயோலா, எம்.சி.சி., பனிமலர், டி.பி.ஜெயின், திருச்சி ஜமால், முகமது பி.எஸ்.ஜி. (கோவை) உள்பட 50 கல்லூரிகளும், 15 பள்ளிகளும் என மொத்தம் 65 அணிகள் பங்கேற்கின்றன. கேரளாவில் இருந்து 2 அணிகளும், பெங்களூருவில் இருந்து ஒரு கல்லூரி அணியும் வருகை தர உள்ளது. மொத்தம் 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் களம் இறங்குகிறார்கள். கைப்பந்து, கூடைப்பந்து, பால் பேட்மிண்டன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், செஸ், கபடி, கோகோ ஆகிய விளையாட்டுகள் நடைபெறுகிறது. பள்ளி மாணவர்களுக்கு கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் டென்னிஸ் (ஒற்றையர் பிரிவு) ஆகிய போட்டிகள் நடக்கிறது.

முதல்முறையாக பார்வையற்ற மாணவர்களுக்கு கைப்பந்து இடம்பெறுகிறது. இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.2 லட்சமாகும். இந்த தகவலை லயோலா கல்லூரி முதல்வர் லூயிஸ் ஆரோக்கியராஜ், விளையாட்டு இயக்குனர் ஜேக்கப், போட்டி ஒருங்கிணைப்பு செயலாளர் விஜயகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்