டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் சிந்து தோல்வி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்டனில் அரைஇறுதியில் பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.

Update: 2023-10-21 21:34 GMT

image courtesy: SAI Media via ANI

ஒடென்ஸ்,

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியனும், தரவரிசையில் 12-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக, ஒலிம்பிக் முன்னாள் சாம்பியனான கரோலினா மரினை (ஸ்பெயின்) சந்தித்தார்.

1 மணி 13 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் சிந்து 18-21, 21-19, 7-21 என்ற செட் கணக்கில் கரோலினா மரினிடம் தோல்வி கண்டு வெளியேறினார். கரோலினா மரினுக்கு எதிராக சிந்து தொடர்ச்சியாக சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும். இந்த ஆட்டத்தில் புள்ளிகள் எடுத்ததும் அளவுக்கு அதிகமாக கத்தியதாக மரினையும், செர்வை எடுக்க விரைவாக தயாராகும்படி சிந்துவையும் நடுவர் மஞ்சள் அட்டை காண்பித்து எச்சரித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்