உலகக்கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: இந்திய அணி தோல்வி
இந்திய அணி அடுத்து கத்தாருடன் மோதுகிறது.;
சென்னை,
20-வது உலகக்கோப்பை கூடைப்பந்து போட்டி 2027-ம் ஆண்டு கத்தாரில் நடக்கிறது. இதையொட்டி தற்போது தகுதி சுற்று நடந்து வருகிறது. இதில் ஆசிய - ஓசியானா மண்டலத்திற்கான தகுதி சுற்றின் ஒரு ஆட்டத்தில் இந்திய அணி (டி பிரிவு) சவுதி அரேபியாவை எதிர்கொண்டது.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சவுதி அரேபியா 81-57 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்திய அணி அடுத்து பிப்ரவரி 27-ந்தேதி கத்தாரை சந்திக்கிறது.