கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை மாள்விகா அரைஇறுதிக்கு தகுதி

பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஜோடி இந்தோனேசியாவின் ஜெசிதா புத்ரி-பெபி செட்டியனிங்ரம் இணையை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

Update: 2023-12-08 22:45 GMT

கவுகாத்தி,

கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அசாமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் கார்த்திகேயா குல்ஷன்குமார் 21-14, 12-21, 9-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் சியாம் ஜூன் வெய்யிடம் வீழ்ந்து நடையை கட்டினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதியில் இந்திய வீராங்கனை மாள்விகா பன்சோத் 21-12, 21-16 என்ற நேர்செட்டில் மலேசியாவின் லிட்ஷனாவை சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஜோடி 22-20, 21-16 என்ற நேர்செட்டில் இந்தோனேசியாவின் ஜெசிதா புத்ரி-பெபி செட்டியனிங்ரம் இணையை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் துருவ் கபிலா-தனிஷா கிரஸ்டோ கூட்டணி 21-16, 21-17 என்ற நேர்செட்டில் இந்தோனேசியாவின் அம்ரி சாக்நவி-வின்னி ஒக்தாவினா இணையை தோற்கடித்து அரைஇறுதி சுற்றை எட்டியது.

Tags:    

மேலும் செய்திகள்