உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: 2-வது சுற்றில் ஶ்ரீகாந்த் தோல்வி

27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

Update: 2022-08-24 09:25 GMT

டோக்கியோ,

27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2-ம் சுற்றில் இந்திய வீரர் கிடாம்பி ஶ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்றில் இந்திய வீரர் கிடாம்பி ஶ்ரீகாந்த், சீன வீரர் ஜாவோ ஜுன் பெங்குடன் மோதினார். இந்த போட்டியில் ஜாவோ 21-9, 21-17 என்ற செட் கணக்கில் ஶ்ரீகாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்