கத்தார் ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி தோல்வி

பெண்களுக்கான கத்தார் டோட்டல் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டோகாவில் நடந்தது.

Update: 2017-02-18 21:11 GMT

டோகா,

பெண்களுக்கான கத்தார் டோட்டல் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டோகாவில் நடந்தது. இதன் இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி 3–6, 6–1, 8–10 என்ற செட் கணக்கில் அபிகைல் ஸ்பியர்ஸ் (அமெரிக்கா)– கேதரினா ஸ்ரீபோட்னிக் (சுலோவேனியா) இணையிடம் போராடி தோற்றது.

ஒற்றையர் அரைஇறுதி ஆட்டங்களில் கரோலினா வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6–1, 6–2 என்ற நேர் செட்டில் ஒலிம்பிக் சாம்பியன் மோனிகா பிய்க்கையும் (பியூர்டோரிகோ), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6–4, 4–6, 6–3 என்ற செட் கணக்கில் சிபுல்கோவாவையும் (சுலோவக்கியா) வீழ்த்தியது.

மேலும் செய்திகள்