அர்ஜூனா விருதுக்கு போபண்ணா பெயர் பரிந்துரை

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா, கனடா வீராங்கனை கேப்ரியாலா டாப்ரோவ்ஸ்கியுடன் இணைந்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.

Update: 2017-06-09 20:43 GMT

புதுடெல்லி,

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா, கனடா வீராங்கனை கேப்ரியாலா டாப்ரோவ்ஸ்கியுடன் இணைந்து சாம்பியன் பட்டத்தை வென்றார். முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள ரோகன் போபண்ணாவுக்கு அகில இந்திய டென்னிஸ் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு ரோகன் போபண்ணாவின் பெயர் பரிந்துரை செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்