2022 ம் ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி பரிசுத்தொகை அதிகரிப்பு

2022 ம் ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி பரிசுத்தொகை அதிகரிப்பட்டுள்ளது.

Update: 2022-06-10 12:06 GMT

கோப்புப்படம் 


கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந் தேதி முதல் ஜூலை 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட 11.1 சதவீதம் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்த பரிசுத்தொகை ரூ. 392 கோடி ஆகும். ஆண், பெண் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு தலா ரூ. 19 கோடி வழங்கப்படுகிறது.  


ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தோற்பவர்கள் ரூ.9.5 கோடி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்