ரஷியாவை கட்டுபடுத்த அதி நவீன ஈகிள் டிரோன்களை விற்பனை செய்யும் அமெரிக்கா

வாஷிங்டன்

ரஷிய-உக்ரைன் போர் இன்றுடன் 102-வது நாளை எட்டுகிறது. இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு உயர் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன ஏவுகணை அமைப்புகளை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

700 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,421 கோடி) மதிப்பிலான ஆயுத தொகுப்பு உக்ரைனுக்கு வழங்கப்பட இருப்பதாக ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் இருவர் தெரிவித்தனர்.

உக்ரைன் போரில் ரஷிய படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு உயர் தொழில் நுட்பம் கொண்ட அதிநவீன ஏவுகணை அமைப்புகளை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

பயங்கரமான எம்கியூ -1சி கிரே ஈகிள் டிரோனை உக்ரைனுக்கு விற்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.இவை ரஷியாவிற்கு எதிரான போரில், இவைகள் ஹெல்ஃபயர் ஏவுகணைகளுடன் பொருத்தப்படலாம்.ஜெனரல் அட்டாமிக்ஸ் இந்த டிரோனை உருவாக்கியுள்ளது.

ரஷியாவிற்கு எதிராக உக்ரைன் பல குறுகிய தூர டிரோன்களைப் பயன்படுத்துகிறது. ஏரோவிரோன்மென்ட்டின் ஆர்கியூ-20 பூமா ஏயூ மற்றும் துருக்கியின் பேயார்க்தர் -டிபி 2 ஆகியவை இதில் அடங்கும். ஆனால் அமெரிகாவின் கிரே ஈகிள் லின் தொழில்நுட்பம் அனைத்தையும் விட சிறந்தது. ஏனெனில் இவை 30 அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் பறக்க முடியும். இது தவிர, அவைகள் பெரிய அளவிலான தரவுகளை சேகரிக்க முடியும். இது மட்டுமின்றி, இந்த ஆளில்லா விமானம் எட்டு ஹெல்ஃபயர் ஏவுகணைகளையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது.இவை அவை வெகு தொலைவு சென்று தாக்கும் திறன் கொண்டவை ஆகும்

டிரோன் நிபுணர் டான் கேட்டர் கூறுகையில், எம்கியூ -1சி கிரே ஈகிள் டிரோன் அளவு பெரியது. இதன் எடை துருக்கியின் பேயார்க்தர் -டிபி 2 ஐ விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். இது தவிர, அதன் ஆயுதம் தாங்கும் திறன் மற்றும் வீச்சு மற்ற டிரோன்களை விட சிறப்பாக உள்ளது. பேயார்க்தர் -டிபி 2 டிரோன் 22 கிலோ துருக்கிய ஏவுகணை எம்ஓஎம் -எல் உடன் ஆயுதம் ஏந்தியிருக்கிறது, இது ஹெல்ஃபயரின் எடையில் பாதி எடை கொண்டது. இது வானத்தில் மிக நீண்ட விமானம் பறக்க முடியும் என கூறினார்.

Update: 2022-06-02 10:29 GMT

Linked news