2 லட்சம் குழந்தைகளை கடத்திய ரஷியா - உக்ரைன் அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, இதுவரை 2 லட்சம் குழந்தைகளை கடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். மக்களிடம் காணொளி மூலம் உரையாற்றிய அவர், ‘கடத்தப்பட்ட குழந்தைகள் ரஷியாவில் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இது சட்டவிரோத செயலாகும். மேலும் இதுவரை 261 குழந்தைகள் ரஷிய போரினால் கொல்லப்பட்டுள்ளனர்’ என்று கூறினார்.
Update: 2022-06-02 12:02 GMT