சித்ரா பவுர்ணமி கிரிவலம்: 20 லட்சம் பக்தர்கள் எதிர்பார்ப்பு

ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு வருகை தந்து கிரிவலம் செல்வது வழக்கம்.;

Update:2025-05-02 12:40 IST

கோப்புப்படம் 

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து வழிபடுவது மிக முக்கியமான வழிபாடாக உள்ளது. உலகிற்கு தலைவனான ஈசனே இங்கு மலையாக வீற்றிருப்பதாக சொல்லப்படுவதால் இந்த மலையை வலம் வந்து வணங்கினால், கைலாயத்தை வலம் வந்து வணங்கியதற்கு சமமாக கருதப்படுகிறது.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு வருகை தந்து கிரிவலம் செல்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு வரும் மே 11, 12 தேதிகளில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கிரிவலப்பாதையில் குடிநீர், கழிவறை வசதி, அன்னதானம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர், எஸ்.பி. மற்றும் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்